.webp)
Colombo (News 1st) நீர்கொழும்பு நீதிமன்ற கட்டடத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர், துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான இருவரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டான பகுதியை சேர்ந்த 40 மற்றும் 51 வயதான இருவரே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளனர்.