.webp)
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவிற்கு தண்டனை வழங்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பிலே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி பிரியலால் சிறிசேனவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவில் பிரதிவாதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.