.webp)
Colombo (News 1st) டெங்கு காய்ச்சலின் புதிய பிறழ்வு அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
காய்ச்சல் ஏற்படின் உடனடியாக வைத்தியரை நாடுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜீ. விஜேசூரிய வலியுறுத்தினார்.
இதனால், டெங்கு நுளம்புகள் பரவாத வகையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் விசேட வைத்திய நிபுணர் மக்களை கேட்டுக்கொண்டார்.
அத்துடன், பிள்ளைகளுக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் அல்லது காய்ச்சல் ஏற்படுமாயின் உடனடியாக வைத்தியரை நாடுமாறும் அவர் குறிப்பிட்டார்.
இந்நாட்களில் வயதானவர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாகவும் தொண்டைவலி, காய்ச்சல், இருமல், சளி போன்றவை புதிய வைரஸ் நோய்க்கான அறிகுறிகள் எனவும் அவர் கூறினார்.
வைரஸ் தொற்று குணமடைந்த பின்னரும் சிலருக்கு இருமல் நீடிக்குமாயின் மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.