.webp)
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 246 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி சகல விக்கட்களையும் இழந்து 378 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி சகல விக்கட்களையும் இழந்து 231 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
அதனடிப்படையில், 147 ஓட்டங்கள் முன்னிலையில் இலங்கை அணி தமது 2 ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.
இலங்கை அணி 8 விக்கட்களை இழந்து 368 ஓட்டங்களை பெற்ற நிலையில், ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.
அதற்கமைய, பாகிஸ்தான் அணியின் வெற்றி இலக்கு 508 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கட்களையும் இழந்து 261 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் பாபர் அஸாம் 81 ஓட்டங்ளை பெற்றார்.
பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய 5 விக்கட்களையும், ரமேஷ் மென்டிஸ் 4 விக்கட்களையும் கைப்பற்றினர்.
அதனடிப்படையில், இலங்கை அணி 247 ஓட்டங்களால் அபார வெற்றியை தனதாக்கிக்கொண்டது.
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற ரீதியில் சமநிலையில் முடிவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.