வவுனியாவை சேர்ந்த 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்

வவுனியாவை சேர்ந்த 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்

by Bella Dalima 16-07-2022 | 5:14 PM
Colombo (News 1st) இலங்கையை சேர்ந்த மேலும் 7 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியாவை சேர்ந்த 7 பேர் நேற்று (15) மாலை தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர் வவுனியா - செட்டிக்குளத்தை சேர்ந்தவர்களே தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளதுடன், இவர்களில் 2 சிறுவர்களும் சிறுமியொருவரும் அடங்குகின்றனர். தனுஷ்கோடி அருகே உள்ள மணல் தீடைக்கு சென்ற 7 பேரும் இராமேஸ்வரம் கரையோர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். விசாரணைக்கு பின்னர் 7 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படவுள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை 116 அகதிகள் தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.