by Bella Dalima 08-07-2022 | 4:38 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - முள்ளியவளை லங்கா IOC எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டோக்கன் அடிப்படையில் பொதுமக்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், வெளியிலிருந்து முச்சக்கரவண்டியில் வருகை தந்த மூவர் தமக்கு எரிபொருள் வழங்குமாறு கோரியுள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் வழங்க மறுத்ததால், இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.