by Bella Dalima 20-06-2022 | 8:10 PM
Colombo (News 1st) சீன ஜனாதிபதி Xi Jinping அனுப்பிய விசேட தகவலை இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிக்கைகு சென்று அவர் அதனை கையளித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான விமான போக்குவரத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சீன தூதுவர் இதன்போது ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.
அதற்கமைய, இந்த வாரம் முதல் இரு நாடுகளுக்கும் இடையில் மூன்று விமான சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ள பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்பில் சீன தூதுவர் இதன்போது ஜனாதிபதியிடம் தௌிவுபடுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.