by Staff Writer 18-06-2022 | 6:46 PM
Colombo (News 1st) அரசாங்கம் மற்றும் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிராக மக்களிடையே ஏற்படும் அவநம்பிக்கையானது, பாரிய எதிர் விளைவுகளை ஏற்படுத்துமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நிலைமையின் பாரதூரத்தன்மையை மக்களுக்கு தெரிவிப்பதை விடுத்து, நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான செயற்பாடுகள் மற்றும் அதன் முன்னேற்றம் தொடர்பில் பொதுமக்களை தௌிவுபடுத்துவது அத்தியாவசியமானது என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு செயற்படுகையில், பொதுமக்களின் நம்பிக்கையை பெறுவது மிகவும் முக்கியமானது என சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.