ஆட்கொணர்வு மனு: தீர்ப்புத் திகதி ஒத்திவைப்பு

ஆட்கொணர்வு மனு: தீர்ப்புத் திகதி ஒத்திவைப்பு

by Staff Writer 17-06-2022 | 8:04 PM
Colombo (News 1st) இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை அறிவிப்பதற்கான திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வவுனியா மேல் நீதிமன்றத்தில் இந்த மனு தொடர்பில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்படவிருந்த நிலையில், எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை அதனை ஒத்திவைத்து இன்று உத்தரவிடப்பட்டது. இறுதி யுத்தகாலப்பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் அனந்தி சசிதரன் உள்ளிட்டோரால் குறித்த ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.