ஒரே குடும்பத்தின் மூவர் தமிழகத்தில் தஞ்சம்

by Staff Writer 01-06-2022 | 1:44 PM
Colombo (News 1st) நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தமிழகத்தை சென்றடைந்துள்ளனர். குறித்த மூவரும் தமிழகத்தின் கோதண்டராமர் கடற்கரையை சென்றடைந்துள்ளனர். கரையோர பாதுகாப்புப் பிரிவு பொலிஸார் குறித்த மூவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு இதுவரை 83 பேர் அகதிகளாக சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.