ஹப்புத்தளையில் ஆர்ப்பாட்டக்களத்தில் ஒருவர் மரணம்

by Staff Writer 28-04-2022 | 8:25 PM
Colombo (News 1st) ஹப்புத்தளையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் ஆர்ப்பாட்டக்களத்திலேயே மரணித்துள்ளார். ஹப்புத்தளை நகரில் இன்று (28) காலை முதல் பெருந்தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த மக்கள் கொழும்பு - பதுளை பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்ட ஒருவர் உடல் களைப்பு காரணமாக வீதி ஓரத்தில் அமர்ந்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார். சம்பவத்தில் தங்கமலை பகுதியை சேர்ந்த 48 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். சடலம் தற்போது ஹப்புத்தளை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.