பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல தீர்மானம் 

by Staff Writer 21-04-2022 | 6:44 PM
Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதற்கு ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் மற்றும் மின்வெட்டு போன்ற பிரச்சினைகளுக்கு சில வாரங்களுக்குள் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்ததாக பிரதமர் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு தொடர்பான பிரச்சினைக்கு இன்னும் சில வாரங்களில் தீர்வு காண முடியும் என கல்வி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன இதன்போது குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தை சீர்குலைக்கும் பொய்யான பிரசாரங்கள் மூலம் மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை இல்லாதொழிக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்கப்போவதில்லை எனவும் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் பிரதமரிடம் கூறியதாக பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.