by Staff Writer 21-04-2022 | 3:49 PM
Colombo (News 1st) காலி முகத்திடலில் இடம்பெறும் போராட்டக்களத்திற்கு சென்று, கருத்து வௌியிட்ட பொலிஸ் சார்ஜன்ட் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குட்டிகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய குறித்த சார்ஜன்ட் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
கடந்த 14 ஆம் திகதி பொலிஸ் சீருடையுடன் போராட்டக்களத்திற்கு சென்று கருத்து வௌியிட்டதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதன்போது, தலா 3 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணையில் அவரை விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.