சாரதிகளின் கவனயீனத்தால் பறிபோன இரு உயிர்கள்

சாரதிகளின் கவனயீனத்தால் பறிபோன இரு உயிர்கள்

by Staff Writer 06-03-2022 | 2:45 PM
Colombo (News 1st) இரத்தினபுரி - பெல்மடுல்ல வீதியின் பட்டுகெதர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். லொறி​யொன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அவருடன் பயணித்த மற்றுமொருவர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கடுவளை மற்றும் ஹோமாகமவைச் சேர்ந்த 27 மற்றும் 28 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சாரதிகள் இருவரினதும் கவனயீனமே விபத்துக்கான காரணம் என்பது தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.