by Staff Writer 27-02-2022 | 5:19 PM
Colombo (News 1st) மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட நேற்று(26) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 556 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 34 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், சந்தேகத்தின் பேரில் 142 பேரும் மோசடி குற்றச்சாட்டில் 352 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.