இலங்கைக்கு எதிரான T20: 2 இந்திய வீரர்கள் விலகல்

இலங்கைக்கு எதிரான T20: இந்திய வீரர்கள் இருவர் விலகல்

by Bella Dalima 23-02-2022 | 4:40 PM
Colombo (News 1st) இலங்கைக்கு எதிரான T20 தொடரிலிருந்து இந்திய வீரர்களான சூர்யகுமார் யாதவும் தீபக் சஹாரும் காயம் காரணமாக விலகியுள்ளனர். குறித்த தொடரிலிருந்து இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கவும் விலகியுள்ளார். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி, 2 டெஸ்ட்கள், 3 T20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்த T20 தொடர் பெப்ரவரி 24 முதல் ஆரம்பமாகிறது. அண்மையில் அவுஸ்திரேலியா சென்றபோது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க, கொரோனாவால் பாதிக்கப்பட்டார். 3-வது T20 தொடங்கும் முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்ததால், அவர் தொடரிலிருந்து விலகியுள்ளார். தற்போது அவுஸ்திரேலியாவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அவுஸ்திரேலியாவில் விளையாடிய இரண்டு T20 போட்டிகளிலும் 3/38 மற்றும் 2/33 என சிறப்பாக பந்துவீசியிருந்தார். இந்நிலையில், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஹசரங்க இன்னும் கொரோனா பாதிப்பிலிருந்து மீளவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, நாளை (24) முதல் தொடங்கும் இந்தியாவிற்கு எதிரான T20 தொடரிலிருந்து வனிந்து ஹசரங்க விலகியுள்ளார். அண்மையில் நடைபெற்ற IPL ஏலத்தில் வனிந்து ஹசரங்கவை 10.75 கோடி இந்திய ரூபாவிற்கு RCB அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.   India's T20 squad for Sri Lanka series:Rohit Sharma (Captain), Ruturaj Gaikwad, Shreyas Iyer, Sanju Samson, Ishan Kishan (wicket-keeper), Venkatesh Iyer, Deepak Hooda, Ravindra Jadeja, Yuzvendra Chahal, Ravi Bishnoi, Kuldeep Yadav, Mohd. Siraj, Bhuvneshwar Kumar, Harshal Patel, Jasprit Bumrah (vice-captain), Avesh Khan.