கொலையில் முடிந்த வாய்த்தர்க்கம்

கொலையில் முடிந்த வாய்த்தர்க்கம்

by Staff Writer 21-02-2022 | 2:31 PM
Colombo (News 1st) இரத்மலானை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இருவரிடையே ஏற்பட்ட தகராறு வலுப்பெற்றமையால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். மொறட்டுவை பகுதியை சேர்ந்த 43 வயதான ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையுடன் தொடர்புடைய நபர் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், சந்தேகநபர் பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.