யாழ்ப்பாணத்திற்கு மேலும் ஒரு பாராளுமன்ற ஆசனம்

யாழ். மாவட்டத்திற்கான பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

by Staff Writer 12-02-2022 | 3:28 PM
Colombo (News 1st) யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 6 ஆசனங்களைக் கொண்டிருந்த யாழ். மாவட்டத்திற்கு மேலுமொரு ஆசனம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் திணைக்களத்தினால் இதற்கான அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் அடிப்படையில், கம்பஹா மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் ஒரு ஆசனம் குறைக்கப்பட்டு, யாழ். மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, கம்பஹா மாவட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 19 ஆசனங்கள் தற்போது 18 ஆக குறைவடைந்துள்ளது.