பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த இருவர் கைது

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த இருவர் கைது

by Staff Writer 01-02-2022 | 2:14 PM
Colombo (News 1st) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து வௌிநாட்டு பணம் மற்றும் வௌிநாட்டு மதுபான போத்தல்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். 200 யூரோ, 58 அமெரிக்க டொலர், ஆறு இலட்சத்து ஐயாயிரத்து 430 ரூபா, ஒரு லீட்டர் கொள்ளளவான 49 மதுபான போத்தல்கள் என்பன சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.