சீனாவிடமிருந்து அரிசி நன்கொடை

சீனாவிடமிருந்து 10 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி நன்கொடை

by Staff Writer 19-01-2022 | 9:12 AM
Colombo (News 1st) பத்து இலட்சம் மெட்ரிக் தொன் அரிசித் தொகையை நாட்டிற்கு நன்கொடையாக வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையிலான இறப்பர் - அரிசி ஒப்பந்தத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த விடயம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் குறித்த அரிசித் தொகை நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.