by Staff Writer 09-01-2022 | 2:28 PM
Colombo (News 1st) மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதி, அரச திறைசேரியில் இருந்து வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
தடையின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
செயலிழந்துள்ள நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கிகளும் சில நாட்களில் பிரதான மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருளைப் பெறுவதற்காக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு 18 பில்லியனைச் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.