50% மாணவர்களுடன் பல்கலைக்கழகங்கள் செயற்பட அனுமதி

இன்று (29) முதல் 50 வீத மாணவர்களுடன் பல்கலைக்கழகங்கள் செயற்பட அனுமதி

by Staff Writer 29-12-2021 | 6:57 AM
Colombo (News 1st) சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி 50 வீத மாணவர்களின் பங்குபற்றலுடன் இன்று (29) முதல் விரிவுரைகள் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை அறிவித்துள்ளார். இதன் பிரகாரம், பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான நடைமுறைகளை முன்னெடுக்குமாறு துணை வேந்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நேற்றிரவு (28) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே, கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.