by Staff Writer 06-12-2021 | 3:42 PM
Colombo (News 1st) பாகிஸ்தானின் சியல்கொட்டில் சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் உடற்பாகங்கள் இன்று (06) மாலை 05 மணிக்கு இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் சியல்கொட்டில் சித்திரவதைக்கு உட்படுத்தி இலங்கையர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான விரிவான விசாரணைகளை பாகிஸ்தான் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதுடன் இதுவரையில் 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதல் தொடர்பில் 13 பிரதான சந்தேகநபர்கள் நேற்று (05) சியல்கோட் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.