by Staff Writer 08-11-2021 | 5:17 PM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் தற்போது கனமழை பெய்கின்றது.
பலத்த மழை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 06 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இருவர் காயமடைந்துள்ளனர்.
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 249 குடும்பங்களை சேர்ந்த 891 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், 635 வீடுகள் பகுதியளவிலும் 12 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.