Colombo (News 1st) நாட்டில் நிலவும் பலத்த மழையுடனான வானிலையினால் 8 மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை (08) மாலை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
