கட்டுநாயக்க விமான நிலையத்துடன் இணைந்த PCR ஆய்வுகூடம் மீள திறப்பு

by Staff Writer 27-10-2021 | 1:17 PM
Colombo (News 1st) தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையத்துடன் இணைந்த PCR மருத்துவ ஆய்வுகூடம் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. PCR பரிசோதனையொன்றுக்காக 40 அமெரிக்க டொலர் கட்டணம் அறவிடப்படுவதுடன், பரிசோதனை முடிவுகளை மூன்று மணித்தியாலங்களுக்குள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று (27) அதிகாலை 2.15 மணிக்கு கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகளுக்கு முதல்தடவையாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.