by Staff Writer 26-10-2021 | 11:59 AM
Colombo (News 1st) மேலும் 29 கொரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த மரணங்கள் அனைத்தும் நேற்று (25) பதிவாகியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.
உயிரிழந்த 29 பேரில் 17 பேர் பெண்கள் எனவும் ஏனைய 12 பேரும் ஆண்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேலும் 561கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, நாட்டில் இதுவரை 5,36,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 5,03,703 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன், 19,302 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.