நாட்டில் கொரோனா மரண எண்ணிக்கை 13,000-ஐ கடந்தது

நாட்டில் கொரோனா மரண எண்ணிக்கை 13,000-ஐ கடந்தது

by Staff Writer 03-10-2021 | 11:14 AM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா மரணங்கள் 13,000-ஐ கடந்துள்ளது. மேலும் 55 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டதையடுத்து மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த அனைத்து மரணங்களும் கடந்த 01 ஆம் திகதி பதிவாகியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார். உயிரிழந்தவர்களில் 38 ஆண்களும் 17 பெண்களும் அடங்குகின்றனர். அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,019 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, 858 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 5,19,633 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவர்களில் 561 பேர் நேற்று குணமடைந்தனர். இதற்கிணங்க, தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,58,646 ஆக அதிகரித்துள்ளது.