மின்சார இணைப்பு துண்டிக்கப்படமாட்டாது

மின் கட்டணம் தாமதமானாலும் மின்சார இணைப்பு துண்டிக்கப்படமாட்டாது: காமினி லொக்குகே

by Bella Dalima 12-09-2021 | 11:08 AM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில் மின் கட்டணத்தை செலுத்த தாமதமாகினாலும் மின்சார இணைப்பு துண்டிக்கப்படமாட்டாதென மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த காலப்பகுதியில் பொதுமக்கள் வருமானத்தை பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக இலங்கை மின்சார சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.