by Bella Dalima 12-09-2021 | 8:33 PM
Colombo (News 1st) வௌிப்படுத்தப்படாத வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக தன்னார்வமாக தகவல்களை வௌியிடுவோருக்கு வரி விலக்களிப்பதற்காக நிறைவேற்றப்பட்ட புதிய நிதி சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது ஆழமான கண்காணிப்பு அவசியம் என Transparency International Sri Lanka நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
இந்த வரி விலக்கு நிதி தூய்தாக்கல் நோக்கங்களுக்காக முறையற்ற வகையில் கையாளப்படுவதற்கான சாத்தியம் உள்ளதால், ஒழுங்குபடுத்தும் அதிகாரமுள்ள நிறுவனங்கள் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.