2.3 பில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஐவர் கைது

by Staff Writer 31-08-2021 | 9:15 AM
Colombo (News 1st) 259 கிலோகிராமுக்கும் அதிக ஹெரோயின் தொகையுடன் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேருவளைக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் கடற்படையுடன் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகையின் பெறுமதி 2.3 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமானது என கடற்படை தெரிவித்துள்ளது. சந்தேகநபர்கள் படகொன்றில் ஹெரோயினை கொண்டுசெல்லும் போது இன்று (31) அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் கூறினர்.