பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகள் இன்று ஆரம்பம்

பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகள் டோக்கியோவில் இன்று ஆரம்பம்

by Bella Dalima 24-08-2021 | 12:07 PM
Colombo (News 1st) 2020 ஆம் ஆண்டிற்கான பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 09 வீர, வீராங்கனைகள் இம்முறை பாராலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்கின்றனர். மெய்வல்லுநர் போட்டிகள், டென்னிஸ், படகோட்டம் உள்ளிட்ட போட்டிகளில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இன்று ஆரம்பமாகவுள்ள பாராலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.