திருக்கோணேஸ்வர ஆலய மாதுமை அம்பாள் தேர் திருவிழா

by Staff Writer 10-08-2021 | 1:10 PM
Colombo (News 1st) பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான திருக்கோணேஸ்வரத்தில் மாதுமை அம்பாள் தேர் திருவிழா இன்று (10) நடைபெற்றது. தேவார முதலி திருஞானசம்பந்தர் கோணமாமலையமர்ந்தாரே என பாடியருளிய திருக்கோணேஸ்வரத்தின் மாதுமை அம்பாள் திருவிழா கடந்த 2 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று காலை 7 மணியளவில் மாதுமை அம்பாள் அழகிய தேரில் எழுந்தருளினார். ஆலயத்தை வலம் வந்த தேர் காலை 9 மணியளவில் கோபுர வாசலை அடைந்தது. மாதுமை அம்பாளுக்கு பச்சை சாத்தி அர்ச்சனை நடத்தப்பட்ட பின்னர் அம்பாள் ஆலயத்திற்குள் எழுந்தருளினார். திருவிழா தேர்பவனி கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.