பசில் ராஜபக்ஸவை பாராளுமன்ற உறுப்பினராக பெயரிட்டு வர்த்தமானி வௌியீடு

by Staff Writer 07-07-2021 | 1:54 PM
Colombo (News 1st) பசில் ராஜபக்ஸவை பாராளுமன்ற உறுப்பினராக பெயரிட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தனது பதவியை இராஜினாமா செய்தமையால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பசில் ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.