கொரோனா நோயாளி தப்பியோட்டம்

சிகிச்சை நிலையத்திலிருந்து கொரோனா நோயாளி தப்பியோட்டம்

by Staff Writer 04-07-2021 | 5:33 PM
Colombo (News 1st) புத்தல கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளி ஒருவர் தப்பியோடியுள்ளார். வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, குறித்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.