by Staff Writer 19-06-2021 | 2:39 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 1,281 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தளை பகுதியிலேயே அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 39,592 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வார இறுதி நாட்களில் பயணக் கட்டுப்பாட்டை மீறுவோரை கைது செய்யும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் மேலும் குறப்பிட்டனர்.