கொள்ளுப்பிட்டியில் கைதான 9 பேருக்கும் பிணை

Update : கொள்ளுப்பிட்டியில் விருந்துபசாரம் நடத்திய 9 பேருக்கும் பிணை 

by Staff Writer 10-06-2021 | 2:05 PM
Colombo (News 1st) Update : தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, கொள்ளுப்பிட்டி சொகுசு தொடர்மாடிக் குடியிருப்பொன்றில் விருந்துபசாரம் நடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 09 பேரும் தலா 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றைய தினம் (09) கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் வௌிநாட்டவர்கள் மூவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.