தொழிற்சங்க நடவடிக்கையில் தபால் ஊழியர்கள்

தொழிற்சங்க நடவடிக்கையில் தபால் ஊழியர்கள்

by Bella Dalima 31-03-2021 | 3:57 PM
Colombo (News 1st) தபால் ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர் தபால் ஊழியர்களை உள்ளீர்ப்பதற்கான புதிய முறைமை உள்ளிட்ட திணைக்களத்தின் சில தீர்மானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று (30) நள்ளிரவு தொடக்கம் இன்று (31) நள்ளிரவு வரை இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தபால் மற்றும் தொலைத்தொடர்புகள் சங்கத்தின் தலைவர் சிந்தக பண்டார தெரிவித்தார். இதேவேளை, தபால் ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். தபால் ஊழியர்களின் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தினால் தபால் சேவைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. ஊழியர்களால் முன்வைக்கப்பட்ட 06 கோரிக்கைகளில் 05 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டார். சில உப தபால் நிலையங்களின் சேவைகளை முன்னெடுப்பதற்கும் ஊழியர்கள் இடையூறு ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.