மேல் மாகாண பாடசாலைகள் அனைத்தும் திறக்கப்படவுள்ளன

மார்ச் 29 முதல் மேல் மாகாணத்தில் அனைத்து தரங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

by Staff Writer 24-03-2021 | 3:20 PM
Colombo (News 1st) மார்ச் மாதம் 29 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் அனைத்து தரங்களுக்குமான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி கிடைத்துள்ளதாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் தெரிவித்தார். மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் தரம் 5, 11 மற்றும் 13 இற்கான கல்வி நடவடிக்கைகள் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமாகின. ஏற்கனவே திட்டமிட்ட வகையில், சித்திரை புத்தாண்டு விடுமுறை வழங்கப்படும் எனவும், புத்தாண்டுக்கு பின்னர் அடுத்த மாதம் 19 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.