ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மை

by Staff Writer 23-02-2021 | 7:57 PM
Colombo (News 1st) COVID காரணமாக உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிக்குமாறு கோரி சிலர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது என பொலிஸார் தெரிவித்ததை அடுத்து அமைதியின்மை ஏற்பட்டது. அதன் பிறகு அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.