by Staff Writer 26-01-2021 | 3:13 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி தகுதியான வேறு ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அதனை தான் ஆட்சேபிக்கவில்லை எனவும் நவீன் திசாநாயக்க அறிவித்துள்ளார்.
அத்துடன், கட்சியின் நுவரெலியா மாவட்ட தலைவராகவும் செயற்குழு உறுப்பினராகவும் தொடர்ந்து செயற்பட விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த விடயங்களை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றினூடாக நவீன் திசாநாயக்க அறிவித்துள்ளார்.