ஒரு தொகை போதை வில்லைகளுடன் இருவர் கைது

by Staff Writer 20-01-2021 | 1:20 PM
Colombo (News 1st) கொழும்பு - கல்கிசை - கொத்தலாவபுர பகுதியில் 1000 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்றிரவு (19) 9.40 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், போதை வில்லைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 26 வயதான இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (20) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.