by Staff Writer 05-01-2021 | 6:59 AM
Colombo (News 1st) பதுளை மாவட்டத்தின் உல்ஹிட்டிய நீர்த்தேக்கத்தின் 07 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அதிக மழையுடனான வானிலையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட உதவி பணிப்பாளர் ஈ.எம்.எல். உதயகுமார தெரிவித்துள்ளார்.
இதனால், நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களை முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.