Colombo (News 1st) மேலும் 02 கொரோனா மரணங்கள் இன்று (04) உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 71 வயதான ஆண் ஒருவர் COVID - 19 தொற்றினால் ஏற்படும் சுவாச நோய்த்தொற்று மற்றும் நுரையீரல் நோய்த் தொற்றின் சிக்கலான நிலை ஆகியவற்றின் காரணமாக நேற்று முன்தினம் (02) உயிரிழந்துள்ளார்.
இரத்தினபுரி பகுதியை சேர்ந்த 86 வயதுடைய மற்றைய ஆண் நபர், COVID - 19 தொற்றினால் ஏற்படும் சுவாச நோய்த்தொற்று மற்றும் நுரையீரல் நோய்த் தொற்றின் சிக்கலான நிலையினால் கடந்த முதலாம் திகதி மரணித்துள்ளார்.
