354 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்

COVID-19 தொற்று: 354 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்

by Staff Writer 30-12-2020 | 8:32 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 354 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய, இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 42,417 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 34 ,623 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7,599 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், இதுவரை இலங்கையில் 195 COVID-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.