மழையுடன் கூடிய காலநிலை நிலவும்

நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும்

by Staff Writer 29-12-2020 | 10:17 PM
Colombo (News 1st) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமேல், ஊவா மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் பிற்பகல் 1 மணிக்கு பின்னர் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணியின் பின்னர் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையின் போது காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், இடி மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.