உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டில்

by Bella Dalima 15-12-2020 | 4:49 PM
Colombo (News 1st) உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்த 9 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்தது. மின் ஒழுக்கு காரணமாக தீ பரவியிருக்கக் கூடும் என அதிகாரிகள் கூறியதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். பொலிஸாரும் தீயணைப்பு படையினரும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.