உடுவில் கோட்டக்கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை

உடுவில் கோட்டக்கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

by Staff Writer 13-12-2020 | 10:06 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம், வலிகாமம் - உடுவில் கோட்டக்கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன. யாழ். உடுவில் பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக வலயக்கல்வி பணிப்பாளர் உதயகுமார் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார். இதேவேளை, வவுனியா - சாளம்பைக்குளம் அல் அக்‌ஷா முஸ்லிம் பாடசாலை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளது. சுகாதார தரப்பினரால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் மு. இராதாகிருஸ்ணன் நியூஸ்பெஸ்ட்டிற்கு தெரிவித்தார். வவுனியா - சாளம்பைக்குளத்தில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.