கல்கிசை குறுக்கு வீதியிலிருந்து சடலம் ஒன்று மீட்பு

by Staff Writer 13-11-2020 | 5:06 PM
Colombo (News 1st) கொழும்பு - கல்கிசை பகுதியில் காலி வீதியை அண்மித்த குறுக்கு வீதியிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. கல்கிசை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கல்கிசை ஶ்ரீ தர்மபாலராம பகுதியை சேர்ந்த 80 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இந்தநிலையில், உயிரிழந்தவரின் சடலம் களுபோவிலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, பாணந்துறை பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் கீழே வீழ்ந்து உயிரிழந்தவரின் சடலம் நேற்று (12) மீட்கப்பட்டுள்ளது.