வியன்னாவில் பயங்கரவாத தாக்குதல்; இருவர் உயிரிழப்பு

வியன்னாவில் பயங்கரவாத தாக்குதல்; இருவர் உயிரிழப்பு

by Staff Writer 03-11-2020 | 9:09 AM
Colombo (News 1st) ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். வியான்னாவின் 6 பகுதிகளில் துப்பாக்கிதாரிகள் துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் ஆயுததாரி ஒருவர் உயிரிழந்ததுடன், ஏனையோரை தேடும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். துப்பாக்கி பிரயோகங்களில் 14 பேர் காயமடைந்துள்ளதுடன் அதில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்படுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதற்கு ஓரிரு மணித்தியாலங்களுக்கு முன்னர் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.